×

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே சாரை பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

செங்கல்பட்டு, மே 10: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள முட்புதரில் இருந்த 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள முட்புதரில் நேற்று பெரிய பாம்பு ஒன்று அங்கும், இங்குமாக சுற்றிக்கொண்டிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்து விடுமோ என்று பீதியடைந்தனர். பின்னர், முட்புதரில் பாம்பு இருப்பது குறித்து செங்கல்பட்டு தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், செங்கல்பட்டு உதவி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று முட்புதரில் சுற்றித்திரிந்த 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், பாம்பை சாக்கு பையில் போட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். பாம்பு பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே சாரை பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Old Bus Stand ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டில் மதுபோதையில் முதியவரை தாக்கிய 4 பேர் கைது